Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேட்டி அளித்தபோது கூறியதாவது: ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள் எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை
ரஜினி நல்ல நடிகர் ஆனால் எம்ஜிஆர் அல்ல. ஆனால் அவருடைய முயற்சி வெற்றி பெறாது பலிக்காது எனினும் அவரது வருகைக்கு நாங்கள் தடையாக இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தில் நாடாளுமன்றத்தில் உள்ளே மற்றும் வெளியேயும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
சிறுபான்மையினரின் ஒரே நம்பிக்கை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் எங்களால் உறுதி அளிக்க முடியும். மோடி அல்ல மோடிக்கு மோடியே வந்தாலும் சரி இந்தியாவிலிருந்து ஒரு சிறுபான்மையினர் கூட அகற்ற முடியாது.
மோடி அமீஷா பயமுறுத்துகிறார்கள் அவர்களால் அதற்கு மேல் எதையும் செய்ய முடியாது. அரசியல் இயக்கத்தில் தியாகிகள் மற்றும் துரோகிகள் இருப்பார்கள் தியாகிகளை அடையாளம் காண வேண்டும் என்றால் சிரமம் ஏற்படும் போது நம்முடன் இருப்பார்கள். துரோகிகள் அடையாளம் காண வேண்டுமென்றால் அதிகாரத்தில் இல்லாதபோது பார்க்கலாம்.
தற்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை. சிந்தியா போன்றவர்களால் அதிகாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என அவர் கூறினார்.